First school in India to teach English to Indians. Which was done under the under leadership of Rev GU Pope in 1850.
Rahul Raghav
Oldest school in Thanjavur
சுரேஷ் குமார் சி
My school
K VALLIAPPAN Krishnan Valliappan
I am study from 6 to 10 best of luck my school
Justin Santhakumar
The best school in tanjor
Thirunavukkarasu jayaraman
1756 ஆம் ஆண்டு இரண்டு மதபோதகர்கள் மிக நீண்ட பயணம் மேற்கொண்டு பல இடங்களில் பள்ளிகளை நிறுவினர். அந்த இருவரில் மிக முக்கியமானவர்,பிரபலமான பிரெட்ரிக் C .சுவார்ட்ஸ் (Rev. Frederick C. Schwartz).இவர் 1761 ஆம் ஆண்டு திருச்சி வந்தார் , 1772 ஆம் ஆண்டு ஆற்காடு நவாபிடம் இருந்து பண உதவி பெற்று தேவாலயம் மற்றும் பள்ளியை நிறுவினார்.
துலாஜா மகாராஜா என்ற மராட்டிய மன்னர் தஞ்சையை ஆண்டு கொண்டு இருந்த சமயத்தில் தஞ்சையில் காலடி எடுத்து வைத்தார் பிரெட்ரிக் C .சுவார்ட்ஸ். அப்பொழுது தஞ்சையில் இருந்த பிரித்தானிய ரெசிடென்ட் (இன்று நாம் கூறும் மாவட்ட ஆட்சியர் போல்,கிழக்கு இந்திய கம்பனியின் மாவட்ட பிரதிநிதிக்கு ரெசிடென்ட் என்று பெயர்) சல்லிவன் (Sullivan)என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்க, பிரெட்ரிக் C .சுவார்ட்ஸ் (Rev. Frederick C. Schwartz) தஞ்சை மகர்நோன்புசாவடியில் 1784 ஆம் ஆண்டு மாகாணப் பள்ளி(Provincial school) ஒன்றை தொடங்கினார். இந்த மாகாணப் பள்ளியின் மரபு வழியில் வந்ததே தற்பொழுது தஞ்சை நகரின் மையத்தில் இயங்கும் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி.
இந்த உன்னத பணி செய்வதற்கு பிரெட்ரிக் C .சுவார்ட்ஸ் (Rev. Frederick C. Schwartz) அவர்களுக்கு,தஞ்சை மராத்திய அரச குடும்பத்தில் இருந்து நல்ல ஒத்துழைப்பும்,உதவியும் கிடைத்தது. சரபோஜி மகாராஜா இந்த மாகாணப் பள்ளி கட்டுவதற்கு தன சொந்த நிலத்தை தானமாக தந்தார்.கிழக்கு இந்திய கம்பனியும் பள்ளி கட்டுவதற்கு சிறப்பு மானியங்கள் வழங்கியது.
இந்த மாகனப்பள்ளி பிறகு வேதியாபுரதிற்கும்(அம்மன்பேட்டை) ,பின்னர் தற்போதைய வடக்கு வீதியில் மாஸ்டர் ராம் மாடி(தஞ்சையில் அன்று வாழ்ந்த ஆங்கில ஆசிரியர்)என்று சொல்லப்படும் இடத்திற்கு மாறியது.பின்னர் இந்த பள்ளி தஞ்சையில் 5 கிளைகளுடன் இயங்கியது அவை 1.மகர்நோன்புசாவடி 2.கோட்டை-வடக்கு வீதி சந்திப்பு 3.கரந்தட்டன்குடி 4.கீழவாசல் 5.அரண்மனை வளாகம்
மேற் கூறிய இந்த 5 கிளைகளில் தற்பொழுது வடக்கு வீதி,கீழவாசல்,அரண்மனை வளாக கிளை மட்டுமே உள்ள இந்த பள்ளிக்கு இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான இடமும், ஒரு தனித்த வரலாறும் உண்டு அது என்னவென்றால் இந்த பள்ளிதான் இன்றைய ஒருகிணைந்த ஒட்டுமொத்த இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் ஆங்கிலப்பள்ளி என்ற பெருமை தஞ்சை செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியையே சாரும்.மேலும் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த G.U.போப் (G. U. Pope) இந்த பள்ளியில் ஆறு ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றினார் என்பது கூடுதல் சிறப்பாகும்.சிறப்பாக பணியாற்றிய இந்த பள்ளி 1864 ஆம் ஆண்டு கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது,ஆனால் நிதிப்பற்றாகுறையால் 1908 ஆம் ஆண்டு கல்லூரி மூடப்பட்டது.மீண்டும் வெறும் பள்ளியாக செயல்பட தொடங்கியது.
அரண்மனை வளாகக் கிளையில் உள்ள தற்போதைய மிகப்பெரிய மைதானம், முன்பு ஹுசூர் மகால்( Huzur Mahal garden) பூங்கா என்று அழைக்கப்பட்ட பூங்கா, இந்த பூங்கா மராட்டிய மன்னன் குடும்பத்திற்கு சொந்தமானது. 1924 ஆம் ஆண்டு இந்த பள்ளிக்கு லீசில் வழங்கப்பட்டது.230 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளிக்கு மற்றொரு சிறப்பு சேர்க்கும் விதமாக உலகின் முதல் இன்டராக்ட் கிளப்(Interact Club) ஆனா ரோட்டரி கிளப்பின், இளையோர் பிரிவு (Youth Wing) 1962 ஆம் ஆண்டு அப்போதைய பள்ளி முதல்வர் திரு பாண்டியன் அவங்களால் தொடங்கப்பட்டது.
பல துறையில் பல்வேறு சாதனை படைத் பலரை இந்த பள்ளி உருவாகியுள்ளது.இன்றும் செயல்படும் இந்த பள்ளி மேலும் சிறப்புடன் செயல்பட்டு பல நூற்றாண்டுகள் கல்வி சேவை புரிந்த மேலும் பல சாதனையாளர்களை உருவாக்க வேண்டும், உருவாக்கும் என நம்புவோம்
துலாஜா மகாராஜா என்ற மராட்டிய மன்னர் தஞ்சையை ஆண்டு கொண்டு இருந்த சமயத்தில் தஞ்சையில் காலடி எடுத்து வைத்தார் பிரெட்ரிக் C .சுவார்ட்ஸ். அப்பொழுது தஞ்சையில் இருந்த பிரித்தானிய ரெசிடென்ட் (இன்று நாம் கூறும் மாவட்ட ஆட்சியர் போல்,கிழக்கு இந்திய கம்பனியின் மாவட்ட பிரதிநிதிக்கு ரெசிடென்ட் என்று பெயர்) சல்லிவன் (Sullivan)என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்க, பிரெட்ரிக் C .சுவார்ட்ஸ் (Rev. Frederick C. Schwartz) தஞ்சை மகர்நோன்புசாவடியில் 1784 ஆம் ஆண்டு மாகாணப் பள்ளி(Provincial school) ஒன்றை தொடங்கினார். இந்த மாகாணப் பள்ளியின் மரபு வழியில் வந்ததே தற்பொழுது தஞ்சை நகரின் மையத்தில் இயங்கும் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி.
இந்த உன்னத பணி செய்வதற்கு பிரெட்ரிக் C .சுவார்ட்ஸ் (Rev. Frederick C. Schwartz) அவர்களுக்கு,தஞ்சை மராத்திய அரச குடும்பத்தில் இருந்து நல்ல ஒத்துழைப்பும்,உதவியும் கிடைத்தது. சரபோஜி மகாராஜா இந்த மாகாணப் பள்ளி கட்டுவதற்கு தன சொந்த நிலத்தை தானமாக தந்தார்.கிழக்கு இந்திய கம்பனியும் பள்ளி கட்டுவதற்கு சிறப்பு மானியங்கள் வழங்கியது.
இந்த மாகனப்பள்ளி பிறகு வேதியாபுரதிற்கும்(அம்மன்பேட்டை) ,பின்னர் தற்போதைய வடக்கு வீதியில் மாஸ்டர் ராம் மாடி(தஞ்சையில் அன்று வாழ்ந்த ஆங்கில ஆசிரியர்)என்று சொல்லப்படும் இடத்திற்கு மாறியது.பின்னர் இந்த பள்ளி தஞ்சையில் 5 கிளைகளுடன் இயங்கியது அவை
1.மகர்நோன்புசாவடி
2.கோட்டை-வடக்கு வீதி சந்திப்பு
3.கரந்தட்டன்குடி
4.கீழவாசல்
5.அரண்மனை வளாகம்
மேற் கூறிய இந்த 5 கிளைகளில் தற்பொழுது வடக்கு வீதி,கீழவாசல்,அரண்மனை வளாக கிளை மட்டுமே உள்ள
இந்த பள்ளிக்கு இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான இடமும், ஒரு தனித்த வரலாறும் உண்டு அது என்னவென்றால் இந்த பள்ளிதான் இன்றைய ஒருகிணைந்த ஒட்டுமொத்த இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் ஆங்கிலப்பள்ளி என்ற பெருமை தஞ்சை செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியையே சாரும்.மேலும் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த G.U.போப் (G. U. Pope) இந்த பள்ளியில் ஆறு ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றினார் என்பது கூடுதல் சிறப்பாகும்.சிறப்பாக பணியாற்றிய இந்த பள்ளி 1864 ஆம் ஆண்டு கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது,ஆனால் நிதிப்பற்றாகுறையால் 1908 ஆம் ஆண்டு கல்லூரி மூடப்பட்டது.மீண்டும் வெறும் பள்ளியாக செயல்பட தொடங்கியது.
அரண்மனை வளாகக் கிளையில் உள்ள தற்போதைய மிகப்பெரிய மைதானம், முன்பு ஹுசூர் மகால்( Huzur Mahal garden) பூங்கா என்று அழைக்கப்பட்ட பூங்கா, இந்த பூங்கா மராட்டிய மன்னன் குடும்பத்திற்கு சொந்தமானது. 1924 ஆம் ஆண்டு இந்த பள்ளிக்கு லீசில் வழங்கப்பட்டது.230 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளிக்கு மற்றொரு சிறப்பு சேர்க்கும் விதமாக உலகின் முதல் இன்டராக்ட் கிளப்(Interact Club) ஆனா ரோட்டரி கிளப்பின், இளையோர் பிரிவு (Youth Wing) 1962 ஆம் ஆண்டு அப்போதைய பள்ளி முதல்வர் திரு பாண்டியன் அவங்களால் தொடங்கப்பட்டது.
பல துறையில் பல்வேறு சாதனை படைத் பலரை இந்த பள்ளி உருவாகியுள்ளது.இன்றும் செயல்படும் இந்த பள்ளி மேலும் சிறப்புடன் செயல்பட்டு பல நூற்றாண்டுகள் கல்வி சேவை புரிந்த மேலும் பல சாதனையாளர்களை உருவாக்க வேண்டும், உருவாக்கும் என நம்புவோம்